search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள் விலை"

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் விலை திடீரென வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், நகப்பாளையம் ,தண்ணீர் பந்தல், ஜேடர்பாளையம் , கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை பூ, சம்பங்கி, அரளி ,செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஏலம் எடுத்த உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும் ,தோரணங்களாலும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லிகை பூ ரூ.850- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.650- க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும் விற்பனையானது. விலை திடீரென வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×